News April 14, 2025
சிஎஸ்கேவில் களமிறங்கும் 17 வயது வீரர்?

சிஎஸ்கே கேப்டனாக இருந்த ருதுராஜ் காயம் காரணமாக நடப்பு சீசனில் இருந்து விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக 17 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சிஎஸ்கே அணியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். அதேநேரத்தில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 22, 2026
திமுகவில் போட்டியிடவில்லை: நடிகர் SV சேகர் அறிவித்தார்

திமுகவுக்கு ஆதரவாக பேசிவரும் நடிகர் SV சேகர், மயிலாப்பூர் தொகுதியில் களமிறங்க முயல்வதாக வெளியான தகவலை மறுத்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில், தேர்தல் அரசியலிலிருந்து 15 ஆண்டுகளுக்கு முன்பும், பாஜகவிலிருந்து 3 ஆண்டுகளுக்கு முன்பும் விலகி விட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், வரும் தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக பிரசாரம் செய்வதோடு, CM ஸ்டாலினுக்கு துணை நிற்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
ஒரு பெண்ணுக்கு 11 குழந்தைகள் பிறந்தன ❤️❤️

நவீன காலத்தில் பெண்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வதே அரிது. ஹரியானாவில் 1 பெண் 11 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட தம்பதிக்கு முதல் பத்தும் பெண் குழந்தைகளாகவே பிறந்ததாம். 19 ஆண்டுகால காத்திருப்புக்கு பின், 11-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாய்க்கு ரத்த சோகை இருந்ததால், ஆபத்தான முறையில் பிரசவம் பார்த்தாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
News January 22, 2026
ஆஸ்கர் ரேஸில் இடம்பெறாத ‘ஹோம்பவுண்ட்’

98-வது ஆஸ்கர் விருதுகள் இறுதிப்பட்டியலில் ‘ஹோம்பவுண்ட்’ இடம்பெறவில்லை. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் இந்தியா பரிந்துரைத்த ‘ஹோம்பவுண்ட்’-க்கு விருது கிடைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அடிக்கடி ஜாதி, மத மோதல் நடக்கும் இடத்திலிருந்து தப்பிக்கும் நண்பர்கள் இருவர், சமூகத்தில் உரிய அந்தஸ்து பெற காவலர் தேர்வு எழுதுகின்றனர். அதில், வெற்றி அடைந்தனரா என்பதே ‘ஹோம்பவுண்ட்’.


