News November 22, 2024

இந்த டிஷ்யூவின் விலை ₹8.4 கோடி.. ஏன் தெரியுமா?

image

ஒரு பொருளின் மதிப்பு அது எங்கு, எதற்கு பயன்படுகிறது என்பதன் அடிப்படையில் அமைகிறது. அப்படி தான், ஒரு சின்ன டிஷ்யூ பேப்பர் இந்திய மதிப்பீட்டில் ₹8.45 கோடிக்கு ஏலம் போயுள்ளது. காரணம், அது கால்பந்து வீரர் மெஸ்ஸி பயன்படுத்தியதாம். உலகக் கோப்பை 2022க்குப் பிறகு, மெஸ்ஸி தனது கண்ணீரைத் துடைக்க இதனை பயன்படுத்தியுள்ளார். இந்த டிஷ்யூவை டி-ஷர்ட், ஷூ போல ஏலத்தில் விட, அது வசூலை வாரியுள்ளது.

Similar News

News August 19, 2025

லிப்ஸ்டிக் போடும் பெண்களே உஷார்..!

image

பெண்களின் மேக்கப்பில் கண்டிப்பாக இடம்பெறும் லிப்ஸ்டிக்கை, வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் ஒன்று உள்ளது. லிப்ஸ்டிக் அட்டையில் ‘PPA Free’ என எழுதியிருந்தால் மட்டுமே வாங்குங்க. இந்த PPA(bisphenol A) இருக்கும் லிப்ஸ்டிக்கை உபயோகித்தால், உடலில் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும் என எச்சரிக்கப்படுகிறது. பொதுவாக அனைத்து லிப்ஸ்டிக்கிலும் இது இருக்காது என்றாலும், கவனமாக இருந்துக்கோங்க!

News August 19, 2025

PM மோடியை சந்தித்த சீன அமைச்சர் வாங் யி

image

டெல்லியில் PM மோடியை சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, இரு நாட்டு எல்லைப் பிரச்னை, வர்த்தகம், கல்விக்கான விசா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியா – சீனா இடையேயான நல்லுறவுக்கு இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

News August 19, 2025

CP ராதாகிருஷ்ணன் Vs சுதர்சன் ரெட்டி.. யாருக்கு வெற்றி?

image

துணை ஜனாதிபதி ரேஸில் தென்னிந்தியர்கள் இருவர் மோதுகின்றனர். தற்போதுள்ள நிலவரப்படி NDA-வின் CP ராதாகிருஷ்ணனுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாகும். லோக்சபா, ராஜ்யசபா 2 அவைகளிலும் 782 பேர் உள்ளனர். இதில், 6 இடங்கள் காலியாக உள்ளன. LS-ல் NDA-வுக்கு 293, INDIA-வுக்கு 249 MP-க்கள் உள்ளனர். RS-ல் NDA-வுக்கு 130 MP-க்கள் உள்ளனர். இதனால் வெற்றிக்கு தேவையான 392-ஐ விட NDA அதிக வாக்குகளை பெற வாய்ப்புள்ளது. SHARE IT.

error: Content is protected !!