News November 22, 2024

வீடுதேடி வரும் சபரிமலை பிரசாதம்

image

சபரிமலை வர முடியாதவர்களுக்கு ஏதுவாக, பல ஆண்டுகளாக பக்தர்களின் வீடுகளுக்கு பிரசாதம் அனுப்பும் திட்டத்தை தபால் துறையும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும் செயல்படுத்துகின்றன. இதனை இந்தியாவில் எந்த போஸ்ட் ஆபீஸில் இருந்து முன்பதிவு செய்தாலும், குறிப்பிட்ட நாளில் வீடுதேடி வரும். அதில், அரவணை, அபிஷேக நெய், விபூதி, அர்ச்சனை பிரசாதம், குங்குமம், மஞ்சள் இருக்கும். ஒரு டின் அரவணை அடங்கிய தொகுப்பு ₹520 ஆகும்.

Similar News

News August 19, 2025

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள்: CM ஆலோசனை

image

துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக CM ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் வைகோ, திருமாவளவன், கமல்ஹாசன், முத்தரசன், ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் மற்றும் திமுக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது குறித்து CM ஸ்டாலின் ஆலோசித்துள்ளார்.

News August 19, 2025

எப்போதும் சோர்வாவே இருக்கீங்களா? இதோ 7 டிப்ஸ்!

image

▶தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் இரவு உணவை உட்கொள்வது சிறந்தது.▶இரவு 10 மணிக்கு தூங்கப் பழகுங்கள்; 8 மணி நேர தூக்கம் அவசியம். ▶காலையில் உடற்பயிற்சி/யோகா செய்வது நல்லது. ▶காலையில் நார் சத்து நிறைந்த உணவை சாப்பிடுங்கள். ▶பிடித்த பாடலை கேட்டுவிட்டு அலுவலகத்துக்கு புறப்படுங்கள். ▶நாள் முழுவதும் மனநிலையை சீராக வைக்க போதுமான அளவு தண்ணீர் அருந்துங்கள்.▶காஃபீன், Junk Food-ஐ தவிருங்கள்.

News August 19, 2025

FLASH: நாய் கடிக்கு ஒரே நாளில் 2 பேர் பலியான சோகம்

image

சென்னை, சேலத்தில் நாய் கடிக்கு அடுத்தடுத்து இருவர் உயிரிழந்தனர். சேலம், இலவம்பாளையத்தை சேர்ந்த குப்புசாமி(43) 2 மாதங்களுக்கு முன்பு நாய்க்கடியால் பாதிக்கப்பட்டார். அவர் முறையாக சிகிச்சை எடுத்து கொள்ளாததால் ரேபிஸ் நோய்க்கு ஆளாகி இன்று உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி மறைவதற்குள் சென்னை குமரன்நகரில் தடைசெய்யப்பட்ட Pit Bull நாய் கடித்ததில் கருணாகரன்(55) சற்றுமுன் உயிரிழந்தார். தெருவில் நாய்களிடம் உஷார்!

error: Content is protected !!