News March 21, 2024

காஞ்சிபுரம்: கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், தேர்தல் செலவின பார்வையாளர்கள் (திருப்பெரும்புதூர்) சந்தோஷ் சரண் (காஞ்சிபுரம்) மதுக்கர் ஆவேஸ் , மற்றும் வருமான வரி நோடல் அலுவலர் (காஞ்சிபுரம்) பாலமுரளிதரன் ஆகியோர் தலைமையில் செலவின கண்காணிப்பு குழு அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

Similar News

News February 10, 2026

காஞ்சிபுரத்தில் 200 கிராம உதவியாளர்கள் கைது!

image

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு, கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 4 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், 5ஆவது நாளான நேற்று(பிப்.9) வந்தவாசி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு நிலவியது. இதையடுத்து, போலீசார் 200க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்களை கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

News February 10, 2026

காஞ்சிபுரத்தில் கொந்தளித்த மக்கள்!

image

சுங்குவார்சத்திரம் அருகே குன்னம் ஊராட்சியில் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் குடியிருப்பு பகுதி மற்றும் கல்லூரி அருகே டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், இது திறக்கப்பட்டால், சமூக விரோத செயல்கள் அதிகரிக்கும் எனவும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகும் எனக் கூறி 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

News February 10, 2026

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!