News November 21, 2024
இஸ்ரேல் பிரதமருக்கு பிடிவாரண்ட்

போர்க்குற்றத்திற்காக இஸ்ரேல் PM நெதன்யாகு, அந்நாட்டு EX பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்டுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் நெதன்யாகு, கேலன்ட் வெளிநாடுகளுக்குச் சென்றால் கைது செய்யப்படலாம். காசா மக்களுக்கு உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு தடை ஏற்படுத்தி, உயிரிழப்புகளுக்கு வழிவகுத்ததாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Similar News
News August 19, 2025
உயிர் பயம் உள்ளது.. அஜித் மரணத்தில் அடுத்த அதிர்ச்சி

கோயில் காவலாளி அஜித் கொல்லப்பட்ட வழக்கில், அவரது தரப்பு வக்கீல் கார்த்திக் ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். கோர்ட் உத்தரவிட்டும் போலீஸ் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என தெரிவித்த அவர், வழக்கை நடத்தக் கூடாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் தெரிவித்துள்ளார். அச்சுறுத்தும் நபர்கள் குறித்த விவரங்களை கார்த்திக் ராஜா தெரிவித்தால், மேலும் பல தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.
News August 19, 2025
சுதர்சன் ரெட்டியை தேர்ந்தெடுத்தது ஏன்?

INDIA கூட்டணியின் து.ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி சட்டத்துறையில் நல்ல அனுபவம் பெற்றவர். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான இவர், கட்சி சார்பற்றவர். இவர் எந்த தேர்தலிலும் இதுவரை பங்கேற்றதில்லை. இவரை வேட்பாளராக தேர்ந்தெடுத்த கார்கே, ஒரு சிறந்த மனிதரை, நன்கு சட்டம் அறிந்தவரை வேட்பாளராக அறிவித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
News August 19, 2025
அன்புமணிக்கு தேதி குறித்த ராமதாஸ்; மீண்டும் நோட்டீஸ்

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதிலளிக்காத நிலையில், அவர் கட்சியில் இருந்து இன்று நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் அன்புமணிக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு ஆக.31ம் தேதிக்குள் நேரிலோ அல்லது கடிதத்தின் வாயிலாகவோ அன்புமணி பதிலளிக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது.