News November 21, 2024
என் நெஞ்சில் பாரம் வந்தால்.. சாய்வேனே உன் தோளிலே

கல்வி, வேலை உள்ளிட்ட பல காரணங்களால் நம் தாயை பிரிந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், கவனமின்மை, மன அழுத்தம் ஏற்படலாம். இதுபோன்ற நேரங்களில் நம் தாயுடன் போனில் பேசினாலே மன அழுத்தம் குறையும் என்கின்றன ஆய்வுகள். தாயின் குரலை கேட்கும் போது சமூக பிணைப்புகளை உண்டாக்கும் oxytocin ஹார்மோன் உடலில் சுரந்து, அவர்கள் அரவணைப்பை பெறுவது போல உணர வைக்குமாம். உடனே உங்க அம்மாவிடம் பேசிப்பாருங்க.
Similar News
News August 15, 2025
தமிழகத்தின் குரல்: முதல்வர்களுக்கு கிட்டிய உரிமை

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட PM சுதந்திர தினத்தில் கொடியேற்றும்போது, அதே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட CM ஏன் கொடியேற்றக் கூடாது என்ற கேள்வியை எழுப்பினார் அன்றைய CM கருணாநிதி. தொடர்ந்து, அப்போதைய PM இந்திரா காந்திக்கு பலமுறை கடிதங்கள், நேரில் வலியுறுத்தல், சட்டப்பேரவையில் தீர்மானம் என அழுத்தம் கொடுத்தார். பின்பு, 1974-ல் முதல்வர்களுக்கு கொடியேற்றும் உரிமையை இந்திரா காந்தி வழங்கினார்.
News August 15, 2025
தலைமை மீது அப்செட்டில் MP தங்க தமிழ்செல்வன்!

திமுக தலைமை மீது MP தங்க தமிழ்செல்வன் அதிருப்தியில் இருக்கிறார். <<17279741>>அரசு விழா மேடையில் தன்னை அவமதித்த<<>> ஆண்டிபட்டி MLA மகாராஜனுக்கு எதிராக அவர் தலைமையிடம் முறையிட்டுள்ளார். ஆனால், MLA மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், மா.செ.,வாக இருந்தும் தனக்கு மதிப்பில்லை என நிர்வாகிகள் சிலரிடம் புலம்பியுள்ளாராம். தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த மோதல் கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
News August 15, 2025
ஏன் ரோஹித் வெற்றிகரமான கேப்டன்?

கிரிக்கெட்டில் ரோஹித்தின் கேப்டன்சிக்கு தனித்தன்மை உண்டு. இந்நிலையில், ஏன் ரோஹித் சர்மா ஒரு வெற்றிகரமான கேப்டனாக ஜொலிக்கிறார் என்று புவனேஷ்வர் குமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ரோஹித் ஒரு முதிர்ச்சியான கேப்டன் என்றார். ஒவ்வொரு வீரர்களின் பலத்தையும் புரிந்துகொண்டு, அவர்களை எவ்வாறு பயன்படுத்துவது என்று அவருக்கு நன்றாகத் தெரியும் எனக் குறிப்பிட்டார். ரோஹித் கேப்டன்சியில் மறக்க முடியாத மொமண்ட் எது?