News March 21, 2024
மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவுக்கு தடை

மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக பொய் செய்திகளை கண்டறிந்து நீக்குவதற்கு உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, அரசியல் சாசனம் தொடர்பாக எழும் கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டியுள்ளது. இதுதொடர்பான வழக்கில் மும்பை நீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்பு வரும் வரை உச்ச நீதிமன்றம் இக்குழுவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
Similar News
News November 2, 2025
விளம்பர சர்ச்சை: டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா PM

USA வரி விதிப்பு நடவடிக்கைக்காக டிரம்ப்பை விமர்சித்து கனடாவின் ஒன்டாரியோ மாகாண முதல்வர் வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையானது. இதனையடுத்து, கனடா உடனான அனைத்து வகை வர்த்தக பேச்சுக்களும் முடிவுக்கு வருவதாகவும், கனடாவிலிருந்து USA-க்கு இறக்குமதியாகும் பொருள்களுக்கு, 10% கூடுதல் வரி விதிக்கப்படுவதாகவும் டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னி டிரம்ப்பிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
News November 2, 2025
வாழ்க்கையில் ஒருமுறையாவது இங்கெல்லாம் போகணும்!

அனைவரும் கால்களில் சக்கரத்தை சுற்றிக்கொண்டு ஏதாவது ஒன்றை தேடி, ஓடிக்கொண்டே இருக்கிறோம். அப்படி ஓடும் அனைவருக்குள்ளும் இருக்கும் ஒரு ஆசை, நின்று நிதானமாக எங்கேயாவது அழகிய இடத்திற்கு சென்று ஓய்வெடுக்க வேண்டும் என்பது. வாழ்க்கையில் ஒருமுறையாவது இங்கு செல்ல வேண்டும் என்று தோன்றும். அப்படிப்பட்ட சில இடங்கள் பற்றி அறிய மேலே ஸ்வைப் பண்ணுங்க…
News November 2, 2025
தேர்தலில் வெற்றி யாருக்கு.. புதிய கருத்துக்கணிப்பு

பிஹாரில் அடுத்த வாரம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், JVC Poll – Times Now நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இதில், நிதிஷ் தலைமையிலான NDA கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 243 இடங்களில் NDA 120 – 140 வரையும், தேஜஸ்வி தலைமையிலான மகாகட்பந்தன் (MGB) 93 – 112 இடங்கள் வரையும் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.


