News November 21, 2024

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்

image

நடிகர் தனுஷிடம் விவாகரத்து பெறும் விசாரணைக்காக, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். விவாகரத்து வழக்கு தொடர்பாக, நடிகர் நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் மனு அளித்திருந்த நிலையில், தற்போது வழக்கு விசாரணைக்காக ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 3 விசாரணையின்போதும் இருவருமே ஆஜராகாத நிலையில் இன்று ஐஸ்வர்யா மட்டும் ஆஜரானரது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 8, 2025

வெளிநாட்டு பறவைகள் சென்னை வருகை!

image

சென்னை அடையாறு நோக்கி வெளிநாட்டுப் பறவைகள் இன்று வந்துள்ளது. அழகாக காட்சியளிக்கும் கூவம் நதிக்கரையில் பறவைகள் பறந்து வருகிறது. சென்னையில் உள்ள நீர் நிலைகளை சென்னை மாநகராட்சி சரியான நேரத்தில் தூர்வாரி சுத்தம் செய்துள்ளதே வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது என கூறப்படுகிறது. இந்த பறவைகளை அந்த பகுதியில் செல்பவர்கள் பார்த்து செல்கின்றனர்.

News December 8, 2025

இன்டிகோ – 71 விமானங்கள் ரத்து, பயணிகள் அவதி

image

சென்னை விமான நிலையத்தில் இன்டிகோ விமான சேவைகள் இன்று ஐந்தாவது நாளாக 71 விமானங்களை ரத்து செய்துள்ளது. இதில் வருகை விமானங்கள் 33, புறப்பாடு விமானங்கள் 38 ரத்து செய்யப்பட்டன. கவுகாத்தி, டில்லி, மும்பை, பூனா, கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூர், அகமதாபாத், கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களுக்கு வருகை விமானங்கள் பாதிக்கப்பட்டன. தொடர்ச்சியான ரத்தால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

News December 8, 2025

சென்னை: தண்ணீர் தகராறில் நாயை ஏவி விட்ட கொடூரம்!

image

திருவல்லிக்கேணி நடுக்குப்பம் 3வது தெருவைச் சேர்ந்த தமிழ்வாணன் (59), நேற்று இரவு குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த எழில் (38) தகராறில் ஈடுபட்டு, தனது நாயை ஏவி தமிழ்வாணனை கடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து மெரினா காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!