News November 21, 2024
பேராசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ஓய்வுபெறும் நிலையில் உள்ள பேராசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களை 2025 மே மாதம் வரை மறு நியமனம் செய்து உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஆண்டின் பாதியிலேயே பேராசிரியர்கள் ஓய்வுபெற்று சென்றால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 15, 2025
ஆகஸ்ட் 15 இந்தியாவுக்கு மட்டும் சுதந்திர தினம் அல்ல..

*Liechtenstein 1940-ல் ஜெர்மன் குடியரசில் இருந்து பிரிந்ததை National day-வாக கொண்டாடுகிறது.
*வட மற்றும் தென் கொரியா நாடுகள், 1945-ல் ஜப்பானில் இருந்து விடுதலை பெற்றதை, Liberation day-வாக கொண்டாடுகின்றன.
*1960-ல் பிரான்ஸிடம் இருந்து சுதந்திரம் பெற்றதை காங்கோ குடியரசு National day-வாக கொண்டாடுகிறது.
*பஹ்ரைன் 1971-ல் பிரிட்டிஷிடம் இருந்து சுதந்திரம் தினமாக கொண்டாடுகிறது.
News August 15, 2025
விடுதலை போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் அதிகரிப்பு: CM

விடுதலை போராட்ட வீரர்களின் குடும்பத்திற்கான மாதாந்திர ஓய்வூதிய உதவித்தொகை ₹22 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல் 2-ம் உலகப்போரில் பங்கேற்றவர்களுக்கான ஓய்வூதியம் ₹15,000 ஆக உயர்த்தப்படுவதாகவும் கூறியுள்ளார். தியாகிகள், போராளிகளுக்கு மணிமண்டபம், சிலைகள் பெரும்பாலும் திமுக ஆட்சியிலேயே அமைக்கப்பட்டதாகவும் சுதந்திர தின உரையில் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News August 15, 2025
11 நிமிடத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை.. செயலியால் அசத்தல்

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொள்ள, பிரத்யேக செயலி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் 11 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதை உறுதி செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. அவசரம் 108 செயலியில் உங்களின் இருப்பிடத்தை உறுதிபடுத்தி தகவல் கொடுத்தால், விரைவாக சேவை கிடைக்குமாம். அவசர தேவைக்கு பயன்படுத்திகோங்க..