News November 21, 2024
பாதுகாப்பு படை ஒத்திகை: மக்கள் பயப்பட வேண்டாம்

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையம் வளாகத்தில, கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த ஒத்திகையில், தேசிய பாதுகாப்பு படை மற்றும் மாநில காவல் துறையினர் கலந்து கொள்ள உள்ளனர். வண்டலூரில் இருந்து கல்பாக்கம் வரையில் இந்த பாதுகாப்பு படை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதால், பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 9, 2025
செங்கல்பட்டு: கத்தி முனையில் அரங்கேறிய பயங்கர சம்பவம்!

பொத்தேரியை சேர்ந்த தஷ்வந்த் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பொத்தேரி கல்லூரி சாலையில் நடந்து செல்லும் போது திடிரென்று மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்து தஷ்வந்தை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்த செல் போன் மற்றும் கையில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 9, 2025
செங்கல்பட்டு: விளையாட்டே வினையாய் அமைந்த சோகம்

மாங்காடு அடுத்த மலையம்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷின் மகள் சாலினி ஸ்ரீ (6), தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வீட்டின் முன் சாலினி விளையாடிக்கொண்டிருந்தபோது, கால் தடுமாறி விழுந்ததில் நெற்றியில் காயமடைந்து மயங்கியுள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, சாலினி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் பெற்றோர்சாலினி உடலை பார்த்து கதறி அழுதனர்.
News December 9, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு நேற்று (டிசம்பர்.8) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


