News November 21, 2024
சென்னிமலையில் கைத்தறி தொழில் முடக்கம்

சென்னிமலையில் 36 கைத்தறி கூட்டுறவுச் சங்கங்கள் செயல்படுகின்றன. 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உறுப்பினராக இருந்து கைத்தறி நெசவு தொழில் செய்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை காரணமாக கைத்தறியின் அனைத்து உபகரணங்களும் மரத்தால் செய்யப்பட்டுள்ளதால் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் அவற்றை இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது என கைத்தறி நெசவாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
Similar News
News August 17, 2025
ஈரோடு: 8 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை!

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற குடற்புழு நீக்க முகாமில் மொத்தமாக 8 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க தின முகாமில் 2080 அங்கன்வாடி மையங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட 1,10,886 குழந்தைகளுக்கும், பள்ளி, கல்வி நிறுவனங்கள் மூலம் 5,28,766 மாணவ, மாணவிகளுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது.
News August 17, 2025
ஈரோடு: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்தால் வேலை!

ஈரோடு: பவானிசாகர் மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும், நீச்சல் மற்றும் மீன்பிடி வலை தொடர்பான திறன்கள் அவசியம். மேலும் விவரங்களுக்கு,பவானியில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம் அல்லது 04295-299261 என்ற எண்ணை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். இதை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.
News August 17, 2025
ஈரோடு: இரண்டு சிறுவர்கள் கைது

ஈரோடு, சித்தோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நசியனூர் பகுதியில், ஆன்லைன் மூலமாக போதை மாத்திரைகளை ஆர்டர் செய்து, 250 போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், பிரபல கொரியர் நிறுவனம் ஒன்றில் சோதனை செய்த போது, போதை மாத்திரை இருந்தது தெரிந்தது. இது தொடர்பாக 2 சிறுவர்களை பிடித்த போலீசார், மாத்திரைகளை பறிமுதல் செய்து, வழக்கு பதிந்துள்ளனர்.