News November 20, 2024
ரூ.6,600 கோடி பிட்காயின் மோசடியை தோண்டும் CBI

2018-இல் நடந்த ரூ.6,600 கோடி பிட்காயின் மோசடி மீது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது CBI. முதன்மை குற்றவாளிகளில் அமித் இறந்துவிட, அஜய் வெளிநாட்டில் மறைந்து வாழ்கிறார். இந்த இருவர் மீதும் சிபிஐ FIR பதிந்துள்ளது. என்சிபி தலைவர் சுப்ரியா சுலே பேசுவதாக ஒரு ஆடியோ வெளியான நிலையில், SC உத்தரவின்படி, CBI விசாரணையை தொடங்கியுள்ளது. ஆனால், சுப்ரியா சுலே குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என மறுத்துள்ளார்.
Similar News
News December 8, 2025
Cinema Roundup: லோகேஷ் – அமீர்கான் படம் டிராப்பா?

*‘தேவதையை கண்டேன்’ படத்தை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக அதன் தயாரிப்பாளர் அறிவிப்பு. *‘திரிஷ்யம் 3’ படத்தின் தியேட்டர் மற்றும் டிஜிட்டல், சாட்டிலைட் உரிமைகளை பென் ஸ்டுடியோஸ் மற்றும் பெனரோமா ஸ்டுடியோஸ் கைப்பற்றியுள்ளது. *தன்னை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள படம் டிராப் ஆகவில்லை என அமீர்கான் அறிவிப்பு. *பிக்பாஸ் இந்தி சீசன் 19 டைட்டில் வின்னரானார் இளம் நடிகர் கௌரவ் கண்ணா.
News December 8, 2025
விரைவில் ஆண்களுக்கும் விடியல் பயணம்?

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், மக்களை கவர அரசு பல திட்டங்களை பரிசீலித்து வருகிறது. அந்த வகையில், மகளிர் விடியல் பயணத்தை போல, ஆண்களுக்கும் இலவச பஸ் பயண திட்டத்தை அறிவிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான விடியல் பயண திட்டம் குறித்த அறிவிப்பு, அடுத்த ஓரிரு மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 8, 2025
நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம்

தேசிய பாடலான வந்தேமாதரம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இன்று நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது. லோக்சபாவில் மதியம் 12 மணிக்கு விவாதத்தை தொடங்கி வைத்து PM மோடி உரையாற்ற உள்ளார். ராஜ்யசபாவில் அமித்ஷா விவாதத்தை தொடங்கி வைக்க உள்ளார். சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்த ‘வந்தே மாதரம்’ பாடலின் வரலாறு, கலாச்சார முக்கியத்துவம் குறித்து MP-க்கள் பேச உள்ளனர்.


