News March 21, 2024
செங்கல்பட்டு: மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் ரத்து

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் (மார்ச்.22) நாளை நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான முகாம்கள் நாடாளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 10, 2025
செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ்அப், எஸ்எம்எஸ் மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய குறுஞ்செய்திகளில் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930-க்கு புகாரளிக்கலாம்.
News September 9, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்ப்ட்டு மாவட்டத்தில் இன்று (செப்-09) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 9, 2025
JUST IN: செங்கல்பட்டு- ஓடும் பேருந்தில் பயணிகள் கதறல்

செங்கல்பட்டு அருகே அரசு பேருந்தின் டயர் கழன்று ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செங்கப்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற அரசு பேருந்தின் டயர் தனியாக கழன்று தாறுமாறாக ஓடியதால் பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.