News March 21, 2024

ஈரோடு அருகே ரூ.35 லட்சம் பறிமுதல்

image

ஈரோடு மாவட்டம் ஆசனூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த கர்நாடக அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் பயணி ஒருவர் ரூ.35 லட்சம் பணம் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் கர்நாடக மாநிலம் தாவணிகரையை சேர்ந்த ஹரிஷ் என்பதும் கோவையில் இடம் வாங்கிய நபருக்கு பணம் கொடுப்பதற்காக கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.

Similar News

News November 6, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக பொது இடங்களில் பாதுகாப்பாக இருக்க அறிவுரை வழங்கினார் வெளியூர் சென்று திரும்பும் நபர்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களான பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ஏறும் போது நமது செல்போன்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை நமது பாதுகாப்பில் மட்டும் வைத்துக் கொள்ளவும்.

அவசர உதவிக்கு டயல் 100 பயன்படுத்திக் கொள்ளவும்

News November 5, 2025

ஈரோடு: இந்த எண்களை தெரிந்து கொள்ளுங்க!

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாகன போக்குவரத்து பதிவு எண்கள்:
ஈரோடு கிழக்கு-TN 33
ஈரோடு மேற்கு- TN 86
கோபிசெட்டிபாளையம்-TN36
பவானி -TN36W
சத்தியமங்கலம் -TN36Z
பெருந்துறை-TN 56 எதற்காவது பயன்படும் SHARE பண்ணுங்க மக்களே !

News November 5, 2025

ஈரோடு: ரேஷன் கடையில் கைரேகை வேலை செய்யலையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு க்ளிக்<<>> செய்து Grievance Redressal, ஈரோடு மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா: 1967 (அ) 1800-425-5901 அழைக்கலாம். (SHARE IT)

error: Content is protected !!