News November 20, 2024
திருப்பத்தூரில் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி, திருப்பத்தூர் நகரம், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, அம்பலூர், வாணியம்பாடி, ஆம்பூர், உமராபாத் உள்ளிட்ட காவல்நிலையங்களில் இன்று ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து மக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
Similar News
News December 7, 2025
திருப்பத்தூர்: ஹோட்டலில் தரமற்ற உணவா? தயங்காம சொல்லுங்க!

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை பல இடங்களில் தீவிர சோதனையில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் தரமற்ற உணவு, கலப்படப் பொருட்களை கொண்டு சமைத்தல் போன்ற புகார் தொடர்ந்து எழுகிறது. சமீபத்தில் சென்னை உணவகத்தில் தேரை, திருவள்ளூர் உணவகத்தில் எலி, கிருஷ்ணகிரி உணவில் பாம்பு என குற்றசாட்டு எழுந்தது. இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக 9444042322 என்ற Whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம். ஷேர்!
News December 7, 2025
திருப்பத்தூர்: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 7, 2025
திருப்பத்தூர்: 10 ஆடுகளை திருடிய அண்ணன் தம்பி கைது

ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் சாந்தம்பாக்கம் ஊராட்சி அயிதம்பட்டு பகுதியை சேர்ந்த லட்சுமி(55) என்பவரின் 10 ஆடுகளை திருடிய 2 பேர் மீது நேற்று (டிசம்பர் 06) உமராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சோமலாபுரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த தனஞ்செழியன் மகன்கள் அண்ணன் தம்பி ராஜேஷ் வயது (30), சரத் வயது (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


