News November 20, 2024
கள்ளக்குறிச்சி விவகாரம்: இபிஎஸ் வரவேற்பு

அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றும், இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்றும், சிபிஐ விசாரணை மூலம் உயிரிழந்த 67 பேருக்கும் உரிய நீதி கிடைக்கட்டும் என்றும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Similar News
News September 11, 2025
கள்ளக்குறிச்சி: ரூ. 1000 பெற, இந்த 5 ஆவணங்கள் போதும்!

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. <
News September 11, 2025
கத்தியை காட்டி மிரட்டி கொலைமிரட்டல் விடுத்த நபர் கைது

ஆசனூரை சேர்ந்த சகுந்தலாவும் வெங்கடேசனும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். கடந்த 3-ம் தேதி வெங்கடேசன் மது போதையில் இரு வீட்டாரின் இடையில் உள்ள சந்தில் சிறுநீர் கழித்ததாகவும், இதனை கேட்ட சகுந்தலாவை வெங்கடேசன் கத்தியை காட்டி கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக அளித்த புகாரின் பேரில் வெங்கடேசனை இன்று போலீசார் கைது செய்தனர்.
News September 11, 2025
தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்து தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று (10.09.2025)
நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.