News March 21, 2024
பழனி கோட்டாட்சியரிடம் வியாபாரிகள் மனு

பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகள் இன்று மனு கொடுத்தனர். சாலையோர சிறு விற்பனையாளர் சங்கம் சார்பாக அடிவாரம் சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் கேட்டும், குதிரை வண்டி ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்து தரக்கோரி பழனி கோட்டாட்சியர் சரவணனை சந்தித்து மனு கொடுத்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
Similar News
News November 14, 2025
திண்டுக்கல்: கேன் தண்ணீர் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு!

திண்டுக்கல் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.
News November 14, 2025
திண்டுக்கல்: இது உங்க PHONE-ல இருக்கா!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 14, 2025
குஜிலியம்பாறையில் இறப்பிலும் இணைந்த தம்பதி!

குஜிலியம்பாறை பஸ் ஸ்டாண்ட் எதிரே மருத்துவமனை நடத்தி வந்த டாக்டர் தங்கவேல் (67) நேற்று முன்தினம் மாலை உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனை கண்ட அவரது மனைவி சிவஜோதி (60) கதறி அழுதபடியே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் ஒரே நேரத்தில் இறுதி சடங்குகள் செய்து உடல்கள் ஒன்றாக மணியகாரன்பட்டியில் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


