News November 20, 2024
IRFAN மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? EPS கேள்வி

Youtuber Irfan குழந்தையின் தொப்புள் கொடி அறுத்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். நடவடிக்கை எடுப்பேன் என முதலில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த அமைச்சர் மா.சு, பின் Irfan உதயநிதியுடன் சாப்பிடும் VIDEO வெளியானதும், இது கொலைக்குற்றமா என பம்மி பதுங்குவதாக சாடினார். குழந்தை பாலினத்தை வெளிப்படுத்தியதற்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்காததையும் சுட்டிக்காட்டினார்.
Similar News
News September 2, 2025
திமுகவுக்கு புது சிக்கல்: காங்., எடுத்த முடிவு

திருமகன் ஈ.வெ.ரா., EVKS இளங்கோவன் என ஈரோடு கிழக்கு தொகுதி காங்., MLA-க்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில், இத்தொகுதியை DMK தன்வசப்படுத்தியது. இந்நிலையில், இத்தொகுதியை மீண்டும் காங்.,க்கே ஒதுக்க, மூத்த தலைவர் நாசே ராமச்சந்திரன் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே கூடுதல் தொகுதிகளை காங்., கேட்கும் நிலையில், இது DMK-வுக்கு புதிய சிக்கலாக மாறியுள்ளது.
News September 2, 2025
வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிப்பு, அந்நிய நிதி வெளியேற்றம் போன்ற காரணங்களால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ₹88.33-ஆக வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. டாலர் மதிப்பு உயர்வதால், இந்தியாவின் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, சமையல் எண்ணெய்கள், பருப்பு, உரங்கள், எண்ணெய், எரிவாயு ஆகியவற்றுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். இது சாமானிய மக்களை கடுமையாக பாதிக்கும்.
News September 2, 2025
கல்வி நிதியில் அரசியல் வேண்டாம்: அன்பில் மகேஸ்

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில், தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கைக்கான கல்வி நிதி ₹600 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றம்சாட்டியுள்ளார். கல்விநிதி வழங்குவதில் மத்திய அரசு அரசியல் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் MP சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதம் இருப்பதை சுட்டிக்காட்டிய மகேஸ், மத்திய அரசு இனியாவது மனமிரங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.