News November 20, 2024

BREAKING: தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

image

தென் தமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏற்கெனவே, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்திருந்தது. இந்நிலையில், இந்திய வானிலை மையம் அதனை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் ஆக மாற்றி அறிவித்துள்ளது. தென் தமிழகத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 2, 2025

முற்றும் தமிழக பாஜக உள்கட்சி பூசல்?

image

2024 தேர்தல் தோல்விக்கு அண்ணாமலையே காரணம் என்று சென்னை வந்த நிர்மலா சீதாராமன் மறைமுகமாக சொன்னாராம். அத்துடன் அண்ணாமலை – நயினார் இடையே வார் ரூம் பிரச்னையும் தீவிரமடைகிறதாம். இதனிடையே நாளை (செப்.3) டெல்லியில் BJP உயர்மட்டக் குழு நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் உள்கட்சி பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News September 2, 2025

மூலிகை: நன்மைகளை வாரி வழங்கும் அகத்தி கீரை!

image

சித்த மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி,
➤அகத்தி கீரையும், அரிசி கழுவிய நீரையும் ஒன்றாக கலந்து சூப் வைத்து சாப்பிட்டால் இருதயம், மூளை, கல்லீரல் வலிமை பெறுகிறது.
➤அகத்திக் கீரையை ஆவியில் வேக வைத்து சாறு பிழிந்து அதில் தேனைக் கலந்து சாப்பிட்டால், வயிற்றுவலி குணமாகும்.
➤அகத்தி கீரையால் உடல் குளிர்ச்சி அடைந்து, பற்கள் உறுதியாகிறது.
➤நோயெதிர்ப்பு சக்தி கூடுவதுடன் உடல் வலுப்பெறுகிறது. SHARE IT.

News September 2, 2025

பழங்குடியின மொழிகளை பாதுகாக்க புதிய AI செயலி

image

பழங்குடியின மக்களின் மொழிகளைப் பாதுகாக்க ஆதி வாணி என்ற AI செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது கோண்டி, பிலி, முண்டாரி போன்ற பழங்குடியின மொழிகளை, இந்தி, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் திறன் கொண்டது. இந்த செயலி. பழங்குடியின கதைகள், வாய்மொழி மரபுகள், கலாச்சாரப் பாரம்பரியங்கள் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக உதவும். நாட்டின் பன்முகத்தன்மையை பறைசாற்றவும் இச்செயலி உறுதுணையாக இருக்குமாம்.

error: Content is protected !!