News November 20, 2024
மகாராஷ்டிராவில் நடந்தது என்ன?

மகாராஷ்டிராவில் 2019-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் BJP+ சிவசேனா கூட்டணி மெஜாரிட்டி பெற்றாலும், அதிகாரப் போட்டியால் ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட, குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. பின் சரத்பவாரின் என்சிபி, காங்., சிவசேனா இணைந்து உத்தவ் தாக்கரேவை CM ஆக்கி கூட்டணி ஆட்சியமைத்தன. ஆனால், 2022-இல் சிவசேனா உடைய, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தது.
Similar News
News September 2, 2025
முற்றும் தமிழக பாஜக உள்கட்சி பூசல்?

2024 தேர்தல் தோல்விக்கு அண்ணாமலையே காரணம் என்று சென்னை வந்த நிர்மலா சீதாராமன் மறைமுகமாக சொன்னாராம். அத்துடன் அண்ணாமலை – நயினார் இடையே வார் ரூம் பிரச்னையும் தீவிரமடைகிறதாம். இதனிடையே நாளை (செப்.3) டெல்லியில் BJP உயர்மட்டக் குழு நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் உள்கட்சி பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News September 2, 2025
மூலிகை: நன்மைகளை வாரி வழங்கும் அகத்தி கீரை!

சித்த மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி,
➤அகத்தி கீரையும், அரிசி கழுவிய நீரையும் ஒன்றாக கலந்து சூப் வைத்து சாப்பிட்டால் இருதயம், மூளை, கல்லீரல் வலிமை பெறுகிறது.
➤அகத்திக் கீரையை ஆவியில் வேக வைத்து சாறு பிழிந்து அதில் தேனைக் கலந்து சாப்பிட்டால், வயிற்றுவலி குணமாகும்.
➤அகத்தி கீரையால் உடல் குளிர்ச்சி அடைந்து, பற்கள் உறுதியாகிறது.
➤நோயெதிர்ப்பு சக்தி கூடுவதுடன் உடல் வலுப்பெறுகிறது. SHARE IT.
News September 2, 2025
பழங்குடியின மொழிகளை பாதுகாக்க புதிய AI செயலி

பழங்குடியின மக்களின் மொழிகளைப் பாதுகாக்க ஆதி வாணி என்ற AI செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது கோண்டி, பிலி, முண்டாரி போன்ற பழங்குடியின மொழிகளை, இந்தி, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் திறன் கொண்டது. இந்த செயலி. பழங்குடியின கதைகள், வாய்மொழி மரபுகள், கலாச்சாரப் பாரம்பரியங்கள் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக உதவும். நாட்டின் பன்முகத்தன்மையை பறைசாற்றவும் இச்செயலி உறுதுணையாக இருக்குமாம்.