News November 20, 2024
பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க எஸ்பி அறிவுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டத்தில் தற்பொழுது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை காலங்களில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், மின்சாரம் சம்பந்தமான பொருட்களை கையாளும்போதும், வெளியில் செல்லும்போதும் கவனமுடன் இருக்குமாறும், ஆறு, குளம் போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் எஸ்பி சிலம்பரசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News August 13, 2025
நெல்லை மாவட்டத்தில் மதுபான கடைகள் மூடல்

சுதந்திர தினத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுக்கடை கள் (டாஸ்மாக்) இம்மாதம் 15ம் தேதி மூடப்படும் என ஆட்சியர் இரா.சுகுமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மூடப்படுவதாக தெரிவித்தார்.
News August 13, 2025
BREAKING: நெல்லை ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு

நெல்லை மனோன்மணியம் பல்கலைகழகத்தில் இன்று ஆளுநர் தலைமையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பட்டம் பெற மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக செயல்பட்டு வருவதாக மாணவி குற்றச்சாட்டு. ஆளுநர் பட்டம் பெற மறுத்து அந்த மாணவி துணைவேந்தரிடம் பட்டம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
News August 13, 2025
பாபநாசம் அணை நீர்வரத்து கடும் சரிவு

நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை குறைந்த நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து இறங்குமுகமாக உள்ளது. இன்று ஆக. 13 காலை 7 மணி நிலவரப்படி பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 295 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக வினாடிக்கு 1750 கன அடி நீர் வெளியேற்றபட்டது. அணை நீர் இருப்பு 117 அடியாக குறைந்தது. சேர்வலாறு அணை நீர் இருப்பு 107 அடி மணிமுத்தாறு அணை நீர் இருப்பு 95 அடி.