News November 20, 2024
கேன்சல் செய்த காசோலை கேட்பது ஏன்?

தற்போது ஒரு சில வங்கிகள் கடன்கோரும் நபரிடமிருந்து Cancelled Cheque-ஐ கோருகின்றன. இதில் அச்சப்பட ஒன்றுமில்லை. வங்கிக் கணக்கின் (Proof of Identity) ஆதாரமாக காசோலை கருதப்படுகிறது. அதில் உள்ள தகவல்களை முன்னெச்சரிக்கையாக பதிவு செய்ய கடனளிக்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. இதனைப் பார்த்து, காப்பீடு & ஒரு சில வங்கி & நிதிச் சேவை நிறுவனங்களும் கேன்சல் செய்த காசோலையைக் கேட்கின்றன.
Similar News
News August 15, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 15 – ஆடி 30 ▶ கிழமை: வெள்ளி ▶ நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM, 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶ குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: சப்தமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை.
News August 15, 2025
ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி விளக்கிய வீரமங்கைகள்

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து ஊடகம் முன்பு விளக்கமளித்த கர்னல் சோபியா குரேசி, விங் கமெண்டர் வியோமிகா சிங் ‘கோன் பனேகா க்ரோர்பதி’ நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்வில் பேசிய சோபியா குரேசி, தொடர் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய அவசியத்தால் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். 25 நிமிடங்களில் இலக்குகள் அழிக்கப்பட்டதாக வியோமிகா சிங் கூறினார்.
News August 15, 2025
பள்ளியில் LED திரையில் ஆபாச படம்

ம.பி மாநிலம் சுதாலியா பகுதியில் பி.எம்.ஸ்ரீ பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஒரு வகுப்பறையில் ஆசிரியர் இல்லாத போது LED திரையில் ஆபாச படம் ஓடி உள்ளது. அந்த சமயத்தில் 13 மாணவர்கள் வகுப்பில் இருந்துள்ளனர். அதில் ஒரு மாணவர் இச்சம்பவத்தை வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், 3 பேர் கொண்ட குழு அமைத்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.