News November 20, 2024

ஆசிரியை படுகொலை: இபிஎஸ் ஆவேசம்

image

தஞ்சாவூரில் அரசுப் பள்ளி ஆசிரியை ரமணி (26) கொலை செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக கூறிய அவர், தமிழகத்தில் அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக விமர்சித்தார். மேலும், சட்டம் ஒழுங்கை காப்பதில் முதல்வர் கவனம் செலுத்தும்படியும் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News December 9, 2025

International 360°: US-க்கு மாற்றாக ஐரோப்பா அமைதி ஒப்பந்தம்

image

*வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரிக்கு $108.4 பில்லியன் வழங்க முன்வந்த பாரமவுண்ட். *AI-க்கான தேசிய விதியை உருவாக்க உள்ளதாக டிரம்ப் அறிவிப்பு. *ஐரோப்பா அமைதி ஒப்பந்தம் விரைவில் தயாராக உள்ளதாக ஜெலன்ஸ்கி தகவல். *நைஜீரியாவில் ஆயுத குழுக்களால் கடத்தப்பட்ட 100 பள்ளி மாணவர்கள், ஒரு மாதத்திற்கு பின் மீட்பு. *ஹோண்டுராஸ் அதிபர் தேர்தல் முடிவுகள் 3 நாள்கள் நிறுத்தத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்டு வருகின்றன.

News December 9, 2025

இன்று அனல் பறக்க போகும் நாடாளுமன்றம்

image

இந்திய அரசியலில் புயலை கிளப்பிவரும் SIR நடவடிக்கை குறித்து இன்று மக்களவையில் விவாதம் நடக்க உள்ளது. 10 மணி நேரம் நடக்கவுள்ள இந்த விவாதத்தை ராகுல் காந்தி தொடங்கவுள்ளார். அனைவரது விவாதங்களும் முன்வைக்கப்பட்ட பிறகு அதற்கு சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதிலளிப்பார். இங்கு இந்த விவாதம் முடிந்தபிறகு டிச.10-ம் தேதி மாநிலங்களவையில் மீண்டும் விவாதம் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

News December 9, 2025

டிசம்பர் 9: வரலாற்றில் இன்று

image

*உலக ஊழல் எதிர்ப்பு நாள். *1946 – இந்திய அரசியலமைப்பை வரையறை செய்ய, இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் முதல் தடவையாகக் கூடியது. *1946 – சோனியா காந்தி பிறந்தநாள். *1979 – பெரியம்மை வைரஸ் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. *1986 – இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட 10 திமுக MLA-க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

error: Content is protected !!