News November 20, 2024

கடன் பெற ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் செயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கல்வி கடன் உள்ளிட்டவைகளை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

Similar News

News December 31, 2025

அரியலூர்: கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்

image

அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், காத்திருப்புப் போராட்டம் நேற்று (டிச.30) மாலை நடைபெற்றது. இப்போராட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும், கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகங்களை நவீனமயமாக்குதல் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெறுகிறது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

News December 31, 2025

அரியலூர்: கள்ள சந்தையில் மது விற்ற பெண் கைது

image

விக்கிரமங்கலம் காவல்துறையினர், ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது கள்ள சந்தையில் மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி ஸ்ரீபுரந்தானைச் சேர்ந்த சகுந்தலா என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்பொழுது அவரது வீட்டின் பின்புறம் இருந்து விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்து, சகுந்தலாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 31, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை பிடிப்பதற்கும் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் செல்வது வழக்கம். அதன்படி நேற்று (டிச.30) இரவு முதல் இன்று(டிச.31) காலை வரை ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யவும். இதனை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!