News November 20, 2024

பைக் மீது லாரி மோதி விபத்து: இளைஞர் பலி

image

விக்கிரவாண்டி அருகே உள்ள பாப்பனப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராகுல், மணிகண்டன், விஷ்வா மூவரும், நேற்று ஒரே பைக்கில் அழுக்கு பாலம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த லாரி ஒன்று பைக் மீது மோதியது. இதில் மூவரும் படுகாயமடைந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராகுல் உயிரிழந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 6, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்கமடம் பகுதியில் இன்று (ஆக.06) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

News August 6, 2025

விழுப்புரத்தில் மாபெரும் வேலைவாயப்பு முகாம்

image

விழுப்புரம் ஊரக வாழ்வாதார இயக்கம்&வெற்றி நிச்சயம் திட்டம் சார்பில் வரும் ஆக.9 அன்று செஞ்சி ஸ்ரீ ரங்கபூபதி கலை&அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் 15,000-க்கும் மேற்பட்ட ஆட்களை தேர்வு செய்கின்றன. 8th, 10th, 12th,ITI,DIP.,UG,PG, BE படித்தவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். தகவலுக்கு 9787928247, 8248727719, 9080674133. *ஷேர் பண்ணுங்க

News August 6, 2025

விழுப்புரம் தாசில்தார் மீது புகாரளிப்பது எப்படி?

image

விழுப்புரம் மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04146-259216) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்

error: Content is protected !!