News November 20, 2024
வேலை தேடும் இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வரும் நவ.22 தேதி, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News September 10, 2025
சென்னையில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்

சென்னை மாநகராட்சியின் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் இன்று (செப்.10) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள மொத்தம் 11 வார்டுகளில் இம்முகாம்கள் நடத்தப்படுகின்றன. பொதுமக்கள் தங்கள் முகாம்களில்பங்கேற்று பயன்பெறலாம்.
News September 10, 2025
ஆளுநர் மாளிகையில் நவராத்திரி விழா

கிண்டி ஆளுநர் மாளிகையில் ‘நவராத்திரி கொலு 2025’ செப்டம்பர் 22, முதல் அக்டோபர் 1 வரை கொண்டாடப்பட உள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி 22-ஆம் தேதி விழாவை தொடங்கி வைக்கவுள்ளார். தினமும் மாலை 4:00-5:00 மணி வழிபாடு, 5:00-6:00 மணி கலாச்சார நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 200 பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இதில் பங்கேற்க https://tnrajbhavantour.tn.gov.in/navaratri/ மூலம் 20.09.2025க்குள் முன்பதிவு செய்யலாம்.
News September 9, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (09.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.