News November 20, 2024
தருமபுரி மருத்துவமனைகளுக்கு கலெக்டர் உத்தரவு

Low Risk இருந்து High Risk க்கு மாறும் தாய்மார்களை உடனடியாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அவரை ஊர்தியின் மூலம் அனுப்பப்பட வேண்டும். மேலும், அவர்கள்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா என்பதை உறுதி செய்ய வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட தாய்மார்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் PICME PORTAL-ENTRY போட வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News September 24, 2025
தருமபுரி: உங்களின் குடிநீர் சுத்தமானதா? CHECK பண்ணுங்க!

உங்கள் பகுதி தண்ணீர் பாதுகாப்பானது தானா? குடிக்கவும் சமைக்கவும் ஏற்றது தானா? என்பதை அறிந்து கொள்ளுங்கள். தருமபுரியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் நீரின் தரத்தைப் பரிசோதிக்கும் ஆய்வகங்கள் உள்ளது. அங்கு உங்கள் தண்ணீரை சுத்தமான புதிய பிளாஸ்டிக் கேனில் 2 லிட்டர் அளவு கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுத்த தண்ணீர் குடிக்க உகந்ததா என அங்கு பரிசோதித்து உங்களுக்கு தெரிவிக்கப்படும். ஷேர்!
News September 24, 2025
தர்மபுரி: ரூ.50,000 லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது

தர்மபுரி, காரிமங்கலம் அருகே கூலி வேலை செய்து வரும் தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த மாதம் அவர்களது 16 வயதுடைய 2வது மகள், அதே ஊரை சேர்ந்த மணி (எ) நிர்மல்குமாருடன் காதல் திருமணம் செய்து கொண்டார். குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யாமல் இருக்க, சிறுமியின் தாயிடம் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியுள்ளார். புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கைது செய்தனர்.
News September 24, 2025
தருமபுரி அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

பாலக்கோடு, பெத்தனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணிகண்டன் (38), நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணம் அடையாததால், மனமுடைந்து வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பாலக்கோடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.