News March 21, 2024
இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவித்தது அதிமுக

விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை அதிமுக அறிவித்துள்ளது. விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ விஜயதாரணி, அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். மேலும் எம்எல்ஏ பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். இதனால் காலியானதாக அறிவிக்கப்பட்ட அத்தொகுதிக்கு ஏப்ரல் 19ல் இடைத் தேர்தல் நடக்கிறது. அதில் அதிமுக வேட்பாளராக ராணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 27, 2025
PAK-க்கு ஆதரவாக பேசிய இந்தியர்கள்!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் தெரிவித்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அசாம், திரிபுரா, மேகாலயாவில் மட்டும் இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக அசாமில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். MLA, செய்தியாளர், மாணவர்கள், வழக்கறிஞர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் என பல தரப்பினரும் கைதுக்கு உள்ளாகியுள்ளனர்.
News April 27, 2025
ரூட்டை மாற்றிய மஹிந்திரா.. ₹555 கோடிக்கு ஒப்பந்தம்!

SML Isuzu நிறுவனத்தின் 58.96% பங்குகளை ₹555 கோடிக்கு வாங்க உள்ளதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு பங்கை ₹650 என்ற விலையில் வாங்க உள்ளது. இதன்மூலம், 3.5 டன்களுக்கு மேலான வணிக வாகன உற்பத்தியில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது. இந்திய சந்தையில் பேருந்து, லாரி விற்பனையில் SML Isuzu நிறுவனம் முன்னணியில் உள்ளது. கடந்த 2024 நிதியாண்டில் அந்நிறுவனம் ₹2,196 கோடி வருமானம் ஈட்டியது.
News April 27, 2025
ஸ்டீவ் ஜாப்ஸ் பொன்மொழிகள்

*உங்கள் நேரம் குறைவு, எனவே மற்றவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து வீணாக்காதீர்கள். *புதிய யோசனைகளை உருவாக்கி செயல்படுத்துபவர்களே உண்மையான தலைவர்கள். *எதிர்காலத்தை கணிக்க சிறந்த வழி அதை உருவாக்குவது தான். *சில சமயங்களில் வாழ்க்கை உங்கள் தலையில் ஒரு செங்கல்லால் அடிக்கும். நம்பிக்கையை இழக்காதீர்கள். *நீங்கள் செய்யும் வேலையை நேசித்து, அதில் சிறந்து விளங்க முயற்சி செய்யுங்கள்.