News March 21, 2024
இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவித்தது அதிமுக

விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை அதிமுக அறிவித்துள்ளது. விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ விஜயதாரணி, அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். மேலும் எம்எல்ஏ பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். இதனால் காலியானதாக அறிவிக்கப்பட்ட அத்தொகுதிக்கு ஏப்ரல் 19ல் இடைத் தேர்தல் நடக்கிறது. அதில் அதிமுக வேட்பாளராக ராணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 8, 2025
அதிமுகவுடன் நெருக்கம் காட்டும் பிரேமலதா

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தேமுதிக நெருக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, இபிஎஸ் முதுகில் குத்திவிட்டார் என்று நான் சொல்லவே இல்லை என்று பிரேமலதா கூறியதற்கு பின், இருகட்சிகளுக்கும் நட்பு வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில், இபிஎஸ், மக்களால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படவில்லையே தவிர 4 ஆண்டு காலம் அவர் கையில் கொடுத்த அந்த (CM) பொறுப்பை சிறப்பாக செய்தார் என தெரிவித்துள்ளார்.
News September 8, 2025
துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட சிறுவன் உயிரிழப்பு… சோகம்!

ராஜஸ்தானில், கோட்புட்லியில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட 5 வயது சிறுவன் தேவான்ஷு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனியாக இருந்த தேவான்ஷு, அங்கிருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது தவறுதலாக விரல் டிரிக்கரை அழுத்த, வெளியான குண்டு தலையில் தாக்கி உயிரைப் பறித்தது. குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்லும்போது கவனமாக இருங்கள் பெற்றோர்களே!
News September 8, 2025
50% தள்ளுபடி.. வாகன ஓட்டிகளுக்கு Happy News

செப்.13-ம் தேதியன்று நடைபெறவுள்ள தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள Traffic Fine-களை 50% வரை தள்ளுபடி செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாதது, சிக்னலில் நிற்காமல் சென்றது உள்ளிட்ட 13 வகையான விதிமீறல்கள் இதில் அடங்கும். அதற்கு National Legal Services Authority-யின் ( NALSA) இணையதளத்தில் பதிவு செய்து, டோக்கன்களை பெற வேண்டும். SHARE IT