News November 20, 2024

ரேஷன் அரிசியை விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தல்

image

ரேஷன் அரிசி கடத்துபவர்களை, தமிழக அரசு இரும்புகரம் கொண்டு அடக்கி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூட்டுறவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் பொதுமக்களும், தாங்கள் நியாய விலை கடையில் வாங்கும் அரிசியை விற்பனை செய்யாமல், தங்கள் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Similar News

News March 12, 2026

JUST IN: சேலத்தில் ஒரே இரவில் 7 வீடுகளில் கொள்ளை

image

வீரகனூர் அருகே உள்ள லத்துவாடி கிராமத்தில், சதீஷ்குமார் என்பவரது வீட்டில் 7 பவுன் நகை மற்றும் ரூ. 1.5 லட்சம் பணம் திருடு போனது. இதேபோல் பச்சையம்மாள், முருகன் உள்ளிட்ட மொத்தம் 7 வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இந்தத் தொடர் கொள்ளைச் சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வீரகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 12, 2026

சேலம்: இனி சிலிண்டர் புக் செய்வது ‘ரொம்ப ஈஸி

image

தமிழகத்தில் இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் சரியாகச் செயல்படாததால் எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை இண்டேன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, 7588888824 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமும், 7718955555 என்ற எண்ணில் எஸ்.எம்.எஸ் மூலமும் சிலிண்டர் பதிவு செய்யலாம். மேலும், ஷேர் பண்ணுங்க.

News March 12, 2026

சேலம்: பாமகவில் இணைந்தனர்.. ஷாக்கில் DMK

image

சேலம், ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திமுக மற்றும் விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பாமகவில் இணைந்தனர். மேட்டூர் எம்எல்ஏ-வும், மேற்கு மாவட்ட செயலாளருமான சதாசிவம் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இணைந்தனர். இது சேலம் மாவட்டத்தில் உள்ள திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!