News November 19, 2024
வறுமையை விரட்டச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த பெண் நடுவானில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராசாத்தி, வறுமை காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன் வீட்டு வேலைக்காக மலேசியா சென்றிருந்தார். அதன்பின் சொந்த ஊர் திரும்பாத நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தாயகம் திரும்பிய அவர் குடும்பத்தினரை சந்திக்கும் முன்பே மரணித்தார்.
Similar News
News March 18, 2026
ஸ்டாலினிடம் நேரடியாக டீலிங் செய்யும் திருமா

தொகுதிப்பங்கீட்டு விவகாரத்தில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்டு திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. ஆனால், திமுக தொகுதிப்பங்கீட்டு குழுவோ, அக்கட்சிகள் கேட்கும் தொகுதிகளை தர மறுக்கின்றன. இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்கும் திருமாவளவன், இனி திமுக குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை; ஸ்டாலினிடம் மட்டுமே நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 18, 2026
ஸ்டாலினுடன் தொடர்வது ஏன்? வைகோ புதிய விளக்கம்

வேண்டா வெறுப்பாக திமுகவுடன் மதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் தொடர்வதாக EPS விமர்சித்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் மதிமுக தேர்தல் அறிக்கையை வைகோ வெளியிட்டார். அப்போது பேசிய அவர், கருணாநிதியின் இறுதிக் காலத்தில் அவருக்கு அளித்த வாக்குறுதிக்காக ஸ்டாலினுடன் உள்ளேன் என்றார். அதை நிறைவேற்றும் வகையில் மதிமுக செயல்படுவதாகவும், தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெல்வது உறுதி என்றும் கூறினார்.
News March 18, 2026
அமெரிக்காவில் RSS மீது தடையா? இந்தியா மறுப்பு!

RSS மற்றும் RAW மீது தடைவிதிக்க வேண்டுமென US-ன் சர்வதேச மத சுதந்திர <<19396338>>ஆணையத்தின் பரிந்துரையை<<>> மத்திய பாஜக அரசு மறுத்துள்ளது. இந்த பரிந்துரை உள்நோக்கம் & பாரபட்சமானது என கூறியுள்ளது. இது இந்திய இறையாண்மையை தவறாக சித்தரிக்கும் முயற்சி என்றும், இந்தியா மீது பழிபோடுவதை விடுத்து, US-ல் இந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் & வெறுப்பு சூழல் ஆகிய பிரச்னைகளில் அமெரிக்கா கவனம் செலுத்தவும் வலியுறுத்தியுள்ளது.


