News November 19, 2024

பராமரிப்பு பணி காரணமாக தண்ணீர் விநியோகம் நிறுத்தம்

image

தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளுக்கு, பராமரிப்பு பணி காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் (நவ.20, 21) குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. அந்நேரங்களில், வள்ளுவர் கோட்டம் குடிநீர் பகிர்மான நிலையம், தென்சென்னை குடிநீர் பகிர்மான நிலையம் மற்றும் கீழ்ப்பாக்கம் குடிநீர் பகிர்மான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

Similar News

News September 10, 2025

சென்னையில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்

image

சென்னை மாநகராட்சியின் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் இன்று (செப்.10) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள மொத்தம் 11 வார்டுகளில் இம்முகாம்கள் நடத்தப்படுகின்றன. பொதுமக்கள் தங்கள் முகாம்களில்பங்கேற்று பயன்பெறலாம்.

News September 10, 2025

ஆளுநர் மாளிகையில் நவராத்திரி விழா

image

கிண்டி ஆளுநர் மாளிகையில் ‘நவராத்திரி கொலு 2025’ செப்டம்பர் 22, முதல் அக்டோபர் 1 வரை கொண்டாடப்பட உள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி 22-ஆம் தேதி விழாவை தொடங்கி வைக்கவுள்ளார். தினமும் மாலை 4:00-5:00 மணி வழிபாடு, 5:00-6:00 மணி கலாச்சார நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 200 பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இதில் பங்கேற்க https://tnrajbhavantour.tn.gov.in/navaratri/ மூலம் 20.09.2025க்குள் முன்பதிவு செய்யலாம்.

News September 9, 2025

சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (09.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

error: Content is protected !!