News November 19, 2024

புராதன சின்னங்களை காண இன்று இலவச அனுமதி

image

மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை காண இன்று இலவச அனுமதி வழங்கப்படவுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் நவ.19 முதல் 25ஆம் தேதி வரையில் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு முதல் நாளான இன்று இந்த சிறப்பு சலுகை வழங்கப்பட இருக்கிறது. அதனால் இன்று மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் நுழைவு கட்டணம் செலுத்தாமல் புராதன சின்னங்களை பார்வையிடலாம்.

Similar News

News March 3, 2026

திமுக ஆட்சி தூக்கி எறியப்படுவது உறுதி: விஜய்

image

நெல்லையில் 9 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் டாப் மாநிலத்தில்
சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே என கேள்வியெழுப்பியுள்ள அவர், போதை கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா என்றும் கேட்டுள்ளார். மக்கள் நலனை பற்றி யோசிக்காத திமுக ஆட்சி, தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி என்றும் சூளுரைத்துள்ளார்.

News March 3, 2026

3-ம் உலக போர் மூளுமா?

image

ஈரானுக்கும் எதிராக பிரச்னையில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் US- இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் சீனா, ஈரானுக்கு மறைமுகமாக உதவுவதாக கூறப்படுகிறது. மத்திய கிழக்கில் நிலவும் பிரச்னை ஆசியா, ஐரோப்பா நாடுகளுக்கும் பரவி 3-ம் உலக போர் மூளுமா என்ற விவாதம் தொடங்கியுள்ளது. போரால் பெரும் உயிரிழப்புகளும், நீண்டகால பொருளாதார பாதிப்புகளும் ஏற்படும் என்பதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

News March 3, 2026

சற்றுமுன்: வங்கிக் கணக்கில் மேலும் ரூ.2,000 வந்தது..

image

முதியோர், கைம்பெண்கள், திருநங்கை, மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு சிறப்பு நிதியாக இன்று ₹2,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதாவது, ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் முதியோர் உதவித்தொகை ₹1,200, சிறப்பு நிதி ₹2,000 என மொத்தம் ₹3,200 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!