News November 18, 2024
மாற்று பாதையில் இயக்கப்படும் பாலக்காடு ரயில்

வரும் நவம்பர் 19 மற்றும் 26 ஆகிய தினங்களில் வண்டி எண் 22652 பாலக்காடு இருந்து, MGR சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரயில் மாற்று பாதையில் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக செல்லும். மேலும் கரூர் மோகனுர் நாமக்கல் ராசிபுரம் சேலம் ஜோலார்பேட்டை அரக்கோணம் வழியாக செல்லாது.
Similar News
News March 10, 2026
விழுப்புரம்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
News March 10, 2026
விழுப்புரம்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 10, 2026
JUST IN: விழுப்புரத்தில் இயக்குநரைக் கொன்ற நடிகை!

பில்ராம்பட்டு கிராமத்தில் இறந்த நிலையில் குறும்பட இயக்குனர் ஜெயக்குமார் என்பவர் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் தனது ஆண் நண்பர்களுடன் இணைந்து குறும்பட இயக்குனர் ஜெயக்குமாரை கொலை செய்த துணை நடிகை பூஜா மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட 9 பேரை போலீசார் நேற்று(மார்ச் 9) கைது செய்தனர்.


