News November 18, 2024
லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம்

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி ரமேஷ் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும் மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், மதுக்கரை, அன்னூர் நீதிமன்றங்களிலும் வருகிற 14.12.2024 அன்று தேசிய அளவிலான லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது என்றார்.
Similar News
News March 14, 2026
சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு

சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் போதிய ரயில்கள் நின்று செல்லாததால் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில், நள்ளிரவில் மர்ம நபர்கள் ரயில் நிலையப் பெயர்ப் பலகையில் இருந்த ‘சிங்காநல்லூர்’ என்ற இந்தி எழுத்துக்களைக் கருப்பு மை கொண்டு அழித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 14, 2026
கோவை – பெங்களூரு வந்தேபாரத் ரயில் நேரத்தில் மாற்றம்

கோவை – பெங்களூரு வந்தேபாரத் ரயில் (20642) (மார்ச்.15) முதல் ஒசூர் நிலையத்திற்கு 10 நிமிடங்கள் தாமதமாக வரும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. வழக்கமாக மதியம் 12:05 மணிக்கு ஒசூர் வரும் இந்த ரயில், இனி 12:15 மணிக்கு சென்றடையும். காலை 7:25-க்குப் புறப்படும் இந்த ரயில், தருமபுரி வழியாக மதியம் 1:45-க்கு பெங்களூரு சென்றடைவதில் மாற்றமில்லை.
News March 14, 2026
கோவையில் பரிசு பொருள்கள் வழங்கும் திமுக!

கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி, திமுக சார்பில், செல்வபுரம் பகுதியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, மேற்கு மண்டல திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில், பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ரவி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி சிறப்பித்தார்.


