News November 18, 2024

TNPSC குரூப் 2 தேர்வில் முறைகேடா?

image

கடந்த ஆண்டு நடந்த TNPSC குரூப் 2 தேர்வில் முறைகேடு நடந்ததாக தேர்வர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். 5,000 பேருக்கு பணி வழங்கப்பட்ட நிலையில், தற்போது தான் விடைத்தாள் நகல் வெளியானது. அதில், பலருக்கு மதிப்பெண் முரணாக உள்ளது. விடைத்தாளை 2 மதிப்பீட்டாளர்கள் மதிப்பீடு செய்த நிலையில், 12 மதிப்பெண்களுக்கு முதல் மதிப்பீட்டாளர் 10 மார்க்கும், 2வது மதிப்பீட்டாளர் 0.5 மார்க்கும் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

Similar News

News August 28, 2025

ஆம்பூர் கலவர வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

image

2015-ல் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய <<17541840>>ஆம்பூர் கலவர வழக்கில்<<>> மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ இஸ்லாம் பாஷாவின் சொத்துகளை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கலவரத்தின்போது கோடிக்கணக்கான பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டது. இந்நிலையில், இஸ்லாம் பாஷாவின் சொத்துகளை விற்று நஷ்டத்தை ஈடுகட்டுமாறு ஜட்ஜ் மீனாகுமாரி உத்தரவிட்டுள்ளார்.

News August 28, 2025

பிணையம் இல்லாமல் ₹10 லட்சம் லோன்.. அடடே ஸ்கீம்!

image

உங்கள் வீட்டு பெண்கள் புதிய தொழில் தொடங்கும் யோசனையில் இருக்கிறார்களா? எந்த பிணையமும் இல்லாமல் அவர்களுக்கு ₹10 லட்சம் வரை கடன் வழங்குகிறது மகிளா உத்யம் நிதி யோஜனா திட்டம். இத்திட்டத்தில் கடன் பெற விரும்பும் பெண்கள் குறைந்தது ₹5 லட்சத்தை தொழிலில் முதலீடு செய்யவேண்டும். கடனை திருப்பி அடைக்க 15 ஆண்டுகள் கொடுக்கப்படுகிறது. உங்களது வங்கியின் இணையதளத்தில் இதற்கு நீங்கள் அப்ளை செய்யலாம். SHARE.

News August 28, 2025

BREAKING: தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் தீர்ப்பு

image

தமிழ்நாட்டையே உலுக்கிய ஆம்பூர் கலவர வழக்கில் சற்றுமுன் பரபரப்பு தீர்ப்பு வெளியாகியுள்ளது. 2015-ல் போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஷமீல் அஹமது உயிரிழந்த விவகாரத்தில், 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதுதொடர்பாக 6 கட்டங்களாக பதியப்பட்ட வழக்கில் 126 பேரை விடுதலை செய்து திருப்பத்தூர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

error: Content is protected !!