News November 18, 2024
பிரபுதேவாவையும் விட்டு வைக்காத நயன்தாரா

நயன்தாரா: beyond the fairy tale ஆவணப்படம் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. அதில், நயன்தாரா பேசும் போது, எனக்கு எல்லாமே சினிமாதான், இனி நடிக்கக்கூடாது என்ற முடிவை நான் எடுக்கவில்லை. அந்நபரே சொன்னார். எனக்கு சாய்ஸே தரவில்லை. வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டேன். பின்னர் தவறான நபரை நம்பிவிட்டோமே என்ற கவலை இருந்ததாக கூறினார். இவர் பிரபுதேவாவை தான் சொல்கிறார் என்ற நெட்டிசன்கள் அடித்து பேசுகிறார்.
Similar News
News August 28, 2025
பிணையம் இல்லாமல் ₹10 லட்சம் லோன்.. அடடே ஸ்கீம்!

உங்கள் வீட்டு பெண்கள் புதிய தொழில் தொடங்கும் யோசனையில் இருக்கிறார்களா? எந்த பிணையமும் இல்லாமல் அவர்களுக்கு ₹10 லட்சம் வரை கடன் வழங்குகிறது மகிளா உத்யம் நிதி யோஜனா திட்டம். இத்திட்டத்தில் கடன் பெற விரும்பும் பெண்கள் குறைந்தது ₹5 லட்சத்தை தொழிலில் முதலீடு செய்யவேண்டும். கடனை திருப்பி அடைக்க 15 ஆண்டுகள் கொடுக்கப்படுகிறது. உங்களது வங்கியின் இணையதளத்தில் இதற்கு நீங்கள் அப்ளை செய்யலாம். SHARE.
News August 28, 2025
BREAKING: தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் தீர்ப்பு

தமிழ்நாட்டையே உலுக்கிய ஆம்பூர் கலவர வழக்கில் சற்றுமுன் பரபரப்பு தீர்ப்பு வெளியாகியுள்ளது. 2015-ல் போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஷமீல் அஹமது உயிரிழந்த விவகாரத்தில், 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதுதொடர்பாக 6 கட்டங்களாக பதியப்பட்ட வழக்கில் 126 பேரை விடுதலை செய்து திருப்பத்தூர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
News August 28, 2025
தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு எத்தனை டாக்டர்கள் உள்ளனர்?

2024, அக்டோபர் வரையிலான ஆதார் பதிவுகளின் அடிப்படையில் தரவு ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி, இந்தியாவில் 1 லட்சம் பேருக்கு சராசரியாக 99 பதிவு செய்யப்பட்ட டாக்டர்கள் மட்டுமே உள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு 194 டாக்டர்கள் உள்ளனர். அதிகபட்சமாக கோவாவில் 298, கர்நாடகா 207, கேரளா 203, ஆந்திரா 198 என்ற எண்ணிக்கையில் டாக்டர்கள் உள்ளனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?