News November 18, 2024

ஜெயில் வேண்டாம்.. நடிகை கஸ்தூரி ஜாமீன் மனு

image

தெலுங்கு மக்கள் குறித்து இழிவாக பேசிய நடிகை கஸ்தூரியை வரும் 29-ம் தேதி வரை காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று புழல் சிறையில் அடைக்கப்பட்ட கஸ்தூரி, இன்று அவசர அவசரமாக ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, தனது மாற்றுத்திறனாளி மகனை கவனிக்கும் சிங்கிள் மதர் தான் என்பதால், தன்னை சிறையில் அடைக்க வேண்டாம் என நீதிமன்றத்தில் கஸ்தூரி நேற்று கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 14, 2026

லெனின் பொன்மொழிகள்

image

▶பிழைகள் மற்றும் தோல்விகள் இல்லாமல் கற்றல் ஒருபோதும் நிகழ்வதில்லை. ▶நம்பிக்கை நல்லதுதான். ஆனால் கட்டுப்பாடு சிறந்தது. ▶நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே; நீ விரும்புவதை உலகம் எதிர்த்தாலும் செய்து முடி. ▶தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்திக் கொள்வதற்கான வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும். ▶பெண்ணுரிமை இல்லாத நாடு, காற்றில்லாத வீடு.

News March 14, 2026

விஜய்யின் ஒப்புதல் இன்றி இது நடைபெறாது: துரை வைகோ

image

எடுத்த முடிவில் உறுதியாக இருந்தால்தான், மக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படும் என விஜய்க்கு துரை வைகோ அறிவுறுத்தியுள்ளார். திமுக, பாஜகவை எதிரி எதிர்த்துதான் அரசியலுக்கு வந்ததாக விஜய் கூறினார்; ஆனால் திடீரென தவெக மா.செ கூட்டத்தைக் கூட்டி, அவர்கள் கூட்டணி விரும்புவதாக கூறுவது தலைமையின் ஒப்புதல் இல்லாமல் நடைபெறாது என்பதையே காட்டுகிறது என்றும், விஜய்யின் முடிவு காலப்போக்கில் தெரியவரும் எனவும் கூறியுள்ளார்.

News March 14, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 632 ▶குறள்: வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு. ▶பொருள்: அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்.

error: Content is protected !!