News November 18, 2024

பொள்ளாச்சியுடன் இணைகிறதா உடுமலை, மடத்துக்குளம்?

image

தமிழகத்தில் 2025 குடியரசு தினத்தன்று புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும் அப்போது திருப்பூர் மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தின் கிணத்துகடவு, பொள்ளாச்சி, ஆனை மலை, வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம் தாலுக்காக்களை பிரித்து பொள்ளாச்சி மாவட்டம் அறிவிக்கப்பட உள்ளதாகவும் சமூக வலை தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இதுபோன்று முன்பு பழனி மாவட்டமாக உருவாக்கப்பட உள்ளதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 11, 2025

குண்டு வெடிப்பில் 13 பேர் பலி: திருப்பூரில் சோதனை

image

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் எதிரொலியாக திருப்பூர் ரயில் நிலையத்தில் ஆர்.பி.எப், வெடிகுண்டு தடுப்பு பரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் சோதனை (ம) பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

News November 11, 2025

திருப்பூர் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது, திருப்பூர் மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள். ஊத்துக்குளி சப்பட்டை நாயகன் பாளையம் சமுதாய நல கூட்டத்திலும், உடுமலை வட்டாரம் மலையாண்டிபாளையம் சமுதாய நலக்கூடத்திலும் நடைபெற உள்ளது. முகாமில் பொதுமக்கள் மனுக்கள் வழங்கி பயன் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

News November 10, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 10.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!