News November 18, 2024

மின்னணு முறையில் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி

image

புதுகை மாவட்டத்தில் உள்ள 760 வருவாய்க் கிராமங்களிலும் மின்னணு முறையில் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதாக கலெக்டர் மு.அருணா தெரிவித்தார். நேற்று திருமயம் வட்டம் மணவாளன்கரை கிராமத்தில் நடைபெறும் கணக்கெடுப்பு பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ரவிச்சந்திரன், துணை இயக்குநர் (தோட்டக்கலை) கு.அழகுமலை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News November 8, 2025

வெள்ளனூர் அருகே பைக் மோதி இளைஞர் படுகாயம்

image

வெள்ளனூர் அடுத்த முத்துடையான்பட்டி சாலையில் உஜின் பிலாரன்ஷ்(18) என்பவர் நேற்று SOCயில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்புறம் பைக்கை ஓட்டி வந்த தியாகராஜன் (31) மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் புதுகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 8, 2025

புதுக்கோட்டை: B.E முடித்தவர்களுக்கு ISRO-வில் வேலை!

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: 14.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>{CLICK HERE}<<>>
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News November 8, 2025

புதுகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

புதுகை மாவட்டத்தில் வரும் ஜன.24 தேசிய பெண்குழந்தை தினத்தன்று மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் உள்ளிட்ட வீரதீர செயல் புரிந்த 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு பாராட்டு பத்திரமும் ரூ 1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி 04322 222270 மூலமாக தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!