News November 18, 2024
தமிழகத்தை தண்டிக்கும் செயல்: CM ஸ்டாலின் ஆவேசம்

தமிழகம் வந்துள்ள மத்திய நிதிக்குழு உறுப்பினர்களிடம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பேசிய அவர், “மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் வரி வருவாய் 41% உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், கடந்த 4 ஆண்டுகளாக 33.16% வரி வருவாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இது, தமிழகம் போன்ற மாநிலங்களை தண்டிக்கும் செயல். எனவே மாநிலங்களுக்கான வரி வருவாயை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும்” எனக் கூறினார்.
Similar News
News March 23, 2026
சேலம்: தேர்தல் வந்தாச்சு- உடனே CHECK பண்ணுங்க!

சேலம் மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!
News March 23, 2026
35% மானியத்தில் ₹1 கோடி வங்கி கடன்.. தமிழக அரசு அழைப்பு

சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஹோட்டல் தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு ஏற்கெனவே மின் சலுகையை அறிவித்திருந்தது. இந்நிலையில், அம்பேத்கர் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் ₹1 கோடி வரை வங்கி கடன் பெற விண்ணப்பிக்குமாறு தொழில்முனைவோருக்கு அழைத்து விடுத்துள்ளது. இத்திட்டத்தில் பெறப்படும் கடன்களில் 35% வரை தள்ளுபடி செய்து மானியமாக அரசே செலுத்தும். <
News March 23, 2026
பறவைக் காய்ச்சல்.. தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு

பறவைக் காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் தற்போதுவரை கண்டறியப்படாவிட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி, காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மக்கள் உடனடியாக ஹாஸ்பிடல் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழக்கும் பறவைகளை வெறும் கைகளால் அப்புறப்படுத்தக் கூடாது எனவும் பொது சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. கவனம் மக்களே!


