News March 21, 2024
ராம்நாடு: 3 ரவுடிகள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மரக்குளம் சுந்தரபாண்டி மகன் பாலமுருகன் (28), விருதுநகர் மாவட்டம் அம்மன்பட்டி வெற்றிவேல் மகன் விக்னேஸ்வரன் (26), முதுகுளத்தூர் மூலக்கரைபட்டி கிருஷ்ணன் மகன் மலை கண்ணன் (26). இவர்கள் 3 பேரும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததை ஒட்டி இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி சந்தீஷ் பரிந்துரையின்பேரில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேற்று அதற்கான உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News February 14, 2026
இராம்நாடு: சிவராத்திரியை முன்னிட்டு அரசு அறிவிப்பு

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிவராத்திரி விழா கொண்டாடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு 9 கோவில்களில் சிவராத்திரி விழா நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு 12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசாமிகோவில், விருத்தாச்சலம் விருத்தகிரீசுவரர் மற்றும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில்களில் சிவராத்திரி விழா நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. *SHARE
News February 14, 2026
இராமநாதபுரம் ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.ராமநாதபுரம்- 9445000363
2.ராமேஸ்வரம்- 9445000364
3.திருவாடானை- 9445000365
4.பரமக்குடி- 9445000366
5.முதுகுளத்தூர்- 9445000367
6.கடலாடி- 9445000368
7.கமுதி- 9445000369
*அலுவலக நேரத்தில் மட்டும் அழைக்கவும்* இந்த தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News February 14, 2026
இராமநாதபுரம்: கொலை குற்றவாளிகள் சரண்!

ராமநாதபுரம் கான்சாகிப் தெருவை சேர்ந்தவர் கமால் முஸ்தபா மகன் செய்யது அப்துல்லா(31). இவரை 2025 மே.17ம் தேதியன்று சிலர் காரில் கடத்திச் சென்று கொலை செய்தனர். இவ்வழக்கில் 5 பேர் கைதான நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை சி.பி.சி.ஐ.டி,க்கு மாற்றியது. இதையடுத்து தலைமறைவாக இருந்த 6 பேரில் இருவர் சரணடைந்தனர். மேலும் இருவர் நேற்று சரணடைந்தனர்.


