News March 21, 2024
தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News September 6, 2025
கிருஷ்ணகிரியில் பாலின விகிதத்தில் முன்னேற்றம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் 1000 ஆண்களுக்கு 1010 பெண் குழந்தைகள் பிறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாலின விகிதம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சுகாதாரத் துறையுடன் இணைந்து பல நடவடிக்கைகள் எடுத்தது வருகிறது. அரசு மருத்துவமனைகள், தனியார் ஸ்கேன் மையங்கள் அனைத்திலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, சட்டவிரோத கருக்கலைப்பு தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டன.
News September 5, 2025
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப்.5) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 5, 2025
கிருஷ்ணகிரி: வறுமை நீக்கும் கால பைரவர் கோயில்

கிருஷ்ணகிரி, கல்லுக்குறிக்கியில் புகழ் பெற்ற கால பைரவர் கோயில் உள்ளது. எங்கும் இல்லாத வகையில் இங்கு கால பைரவர் இரண்டு சிலைகளாக உள்ளார். இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.