News November 18, 2024

மாணவர்களின் உடல்கள் கரை ஒதுங்கின

image

மாமல்லபுரம் கடலில் குளித்து மாயமான, அண்ணா நகரைச் சேர்ந்த கிரிஷ் கேசவ், ரிஸ்வான் இருவரது உடல்களும் நேற்று கரை ஒதுங்கின. உடலைப் பார்த்து பெற்றோர், உறவினர் கண்ணீர் விட்டு கதறினர். 16ஆம் தேதி நண்பர்களுடன் குளித்தபோது, ராட்சத அலையில் சிக்கி, கடலுக்கு அடித்துச் செல்லப்பட்ட இருவரும் உடலையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற வந்த நிலையில், நேற்று அவர்களது உடல்கள் கரை ஒதுங்கின.

Similar News

News September 10, 2025

BREAKING: அடையாறு பகுதியில் ED சோதனை

image

சென்னை, அடையாறு பகுதியில் உள்ள மருத்துவர் இந்திரா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக இந்த சோதனை நடைபெற்ற வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதால் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News September 10, 2025

சென்னை: இதை செய்தால் பணம் போகும்! உஷார்

image

சென்னை சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருக்க வேண்டும் என்றனர். (ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930-க்கு புகாரளிக்கலாம்)

News September 10, 2025

சென்னை அருகே தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன்

image

சென்னை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள பண்ணை வீட்டில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் ஜீவன். இவரது தம்பி தேஜ். ஜீவனிடம், தேஜ் 1 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். ஆனால் ஜீவன் பலமுறை கேட்டும் பணத்தை கொடுக்கததாதல், ஆத்திரமடைந்த ஜீவன் தம்பியான தேஜை கத்தியால் வெட்டிக் கொலை செய்தானர். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!