News November 18, 2024
நாம் தமிழர் கட்சியினர் நாளை ஆட்சியரிடம் மனு

ஓட்டப்பிடாரம் தொகுதி புளியம்பட்டி என்ற பகுதியில் செயல்பட்டு வரும் குவாரியை மூடக்கோரி சமீபத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. அந்த போராட்டத்திற்கு தீர்வு ஏற்படாத காரணத்தினால் இன்று (நவ.18) காலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியினர் பெருந்திரளாக சென்று மனு கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இதனை தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் ராஜசேகர், இசக்கி துரை, ஆனந்த் அறிவித்துள்ளனர்.
Similar News
News March 12, 2026
தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்
News March 12, 2026
BREAKING தூத்துக்குடி: வீடு வீடாக சென்று போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவுப்படி 5 தனி படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிராமத்தில் ஒவ்வொரு வீடு வீடாக சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
News March 11, 2026
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் ஆகியவை இணைந்து வரும் 13-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து நடத்த உள்ளது. தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ள இந்தமுகாமில் படித்த வேலையில்லாத இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.


