News March 21, 2024
புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவது நிறுத்தம்

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. அதே போல், தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. இதனால் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவதை உணவு வழங்கல் துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
Similar News
News November 8, 2025
அனைவருக்கும் ஜெமினி ஏஐ PRO பிளான் இலவசம்

25 வயதுக்கு மேற்பட்டவர்களும் கூகுள் ஜெமினி ஏஐ PRO பிளான் இலவசம் என்று ஜியோ தெரிவித்துள்ளது. முன்னதாக 18-25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே கூகுள் ஜெமினி ஏஐ PRO பிளான் இலவசம் என்று அறிவித்திருந்தது. 5ஜி பிளான் வைத்திருப்பவர்கள் My Jio செயலி பயன்படுத்தி இதை கிளெய்ம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் ₹35,100 மதிப்பிலான திட்டங்களை 18 மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.
News November 8, 2025
பிஹார் மக்களை திமுக இழிவுபடுத்தியது: அமித் ஷா

பிஹார் மக்களை பீடியுடன் ஒப்பிட்டு திமுக இழிவுபடுத்தியதாக கூறி அமித்ஷா பிரசாரத்தில் ஈடுபட்டார். தனக்கு பிடித்தமான CM என்று ஸ்டாலினை தேஜஸ்வி குறிப்பிட்டதாக பேசிய அமித்ஷா , அவரது கட்சியான திமுக சனாதன தர்மத்தை இழிவுபடுத்தியதாகவும், ராமர் கோவில் கட்டும் திட்டத்தை எதிர்த்ததாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, TN-ல் பிஹாரிகளை திமுகவினர் துன்புறுத்துவதாக PM மோடி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 8, 2025
மதுவிலக்கை வலியுறுத்தி வைகோ நடைபயணம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தவும், போதைப் பொருள்கள் பயன்பாட்டை எதிர்த்தும் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாக வைகோ அறிவித்துள்ளார். மதுவின் பிடியில் இருந்து இளைய தலைமுறையினரை மீட்டு எடுக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த சமத்துவ நடைபயணம் இருக்கும் என அவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு ஜன.2-ல் தொடங்கும் இந்த நடைபயணத்தை மதுரையில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் வைகோ பேசியுள்ளார்.


