News March 21, 2024

புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவது நிறுத்தம்

image

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. அதே போல், தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. இதனால் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவதை உணவு வழங்கல் துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

Similar News

News September 19, 2025

உழவர்களுக்கு துரோகம் இழைக்கும் திமுக: அன்புமணி

image

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்காமல் திமுக அரசு துரோகம் செய்வதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 9 மாதங்களாகியும் இழப்பீடு வழங்கப்படவில்லை எனவும் ஏக்கருக்கு அறிவித்த ₹6,800 இழப்பீடு தொகை போதாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறைந்தது ஏக்கருக்கு ₹30,000 வழங்க அரசு தவறினால் போராட்டம் நடத்துவேன் என்று அன்புமணி எச்சரித்துள்ளார்.

News September 19, 2025

சூப்பர் 4 சுற்றில் இந்தியா யாருடன் மோதுகிறது?

image

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா விளையாடும் போட்டிகளின் விவரம் வெளியாகியுள்ளது. குரூப் A-ல் முதலிடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா, வரும் 21-ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அதன் பிறகு 24-ம் தேதி வங்கதேசத்துடனும், 26-ம் தேதி இலங்கையுடனும் இந்தியா மோதுகிறது. சூப்பர் 4 சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 28-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

News September 19, 2025

காந்தாரா ரசிகர்களுக்கு 22-ம் தேதி காத்திருக்கும் டிரீட்

image

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழிலும் கொண்டாடப்பட்ட இப்படத்தின் 2-ம் பாகமான ‘காந்தாரா சாப்டர் -1’ பிரமாண்டமாக உருவாகி வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் டிரெய்லர் செப்டம்பர் 22-ம் தேதி 12.45 PM வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 1000 ஆண்டுகளுக்கு முன் நடத்த கதையாக ‘காந்தாரா சாப்டர் -1’ உருவாகியுள்ளது.

error: Content is protected !!