News November 17, 2024

கண்ணபிரான் உட்பட 3 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது

image

தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க தலைவர் கண்ணபிரான், இவரது கூட்டாளிகள் ராக்கி, சிவா ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.இவர்கள் தொடர்ச்சியாக குற்ற செயல்களில் ஈடுபட்டு சமூக பதற்றத்தை உருவாக்கி வருவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் பரிந்துரையின் பேரில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைத்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Similar News

News November 18, 2025

மீனவ சமுதாய இளைஞர்களுக்கான போட்டி தேர்வு ஆயத்த பயிற்சி

image

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க மற்றும் மீனவர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள மீனவர்களின் வாரிசுதாரர்கள் குடிமைப் பணிகளில் சேர்வதற்கு ஆயத்த பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து நவ.25 க்குள் வழங்க வேண்டும்.

News November 18, 2025

மீனவ சமுதாய இளைஞர்களுக்கான போட்டி தேர்வு ஆயத்த பயிற்சி

image

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க மற்றும் மீனவர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள மீனவர்களின் வாரிசுதாரர்கள் குடிமைப் பணிகளில் சேர்வதற்கு ஆயத்த பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து நவ.25 க்குள் வழங்க வேண்டும்.

News November 17, 2025

நெல்லை: ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய தந்தை, மகன்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெற்ற தகுதித் தேர்வு (டெட்) 33 மையங்களில் தேர்வு எழுத 157 மாற்றுத் திறனாளிகள் உள்பட 11,640 பேருக்கு தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. அவர்களில், 10,565 பேர் தேர்வை எழுதினர். பாளை தனியார் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையங்களில் தந்தையும் மகனும் தேர்வு எழுதினர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார் ஆய்வு செய்தார்.

error: Content is protected !!