News November 17, 2024
பெண் உட்பட நான்கு பேருக்கு வெட்டு

ராணிப்பேட்டை அருகே ஆயல் நாகத்தாங்கலை சேர்ந்த சர்வேஷ் அப்பகுதியில் பைக்கில் வேகமாக சென்றுள்ளார். இது தொடர்பாக சிலர் அவரை தட்டி கேட்டுள்ளனர்.இந்நிலையில் இன்று சர்வேஷ், தம்பி சந்துரு, தந்தை சுரேஷ், பாட்டி கிருபாவதி ஆகியோரை ஐந்துக்கும் மேற்பட்ட கும்பல்தாக்கி கத்தியால் வெட்டியுள்ளனர். படுகாயம் அடைந்த 4 பேரும் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாணாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 12, 2025
ராணிப்பேட்டை: NABARD வங்கியில் வேலை வேண்டுமா..?

ராணிப்பேட்டை பட்டதாரிகளே.., தேசிய கிராமப்புறப் புற வங்கியான NABARD Grade – A வங்கித் தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Assistant Manager உட்பட பல்வேறு பதவிகளுக்கான தேர்வுகள் நடைபெறும். மாதம் ரூ.44,500 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <
News November 12, 2025
ராணிப்பேட்டை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News November 12, 2025
ராணிப்பேட்டையில் நாளை மின் தடை

ராணிப்பேட்டையில் நகரம், ஆடோ நகர், வீ.சி.மோட்டூர் , ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந்தி நகர், மேல் புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லிக்குளம், சின்ன தகரகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை(நவ.13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


