News November 17, 2024

திருச்செந்தூர் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு

image

கார்த்திகை மாத முதல் தேதியை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலில் நேற்று(நவ.,16) காலை முதல் இரவு வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. தொடர்ந்து, இரவு கோயில் பிரகாரங்களில் பக்தர்கள் குடும்பத்தோடு கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். இதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Similar News

News March 7, 2026

தூத்துக்குடி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>tnuwwb.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். SHARE பண்ணுங்க!

News March 7, 2026

தூத்துக்குடி: தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை

image

கோவில்பட்டி அருகே கடலையூர் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜ் (60) என்பவர் கடந்த சில மாதங்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார். மேலும் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற்று வந்தும் குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 7, 2026

தூத்துக்குடியில் சகோதரர்களுக்கு இரட்டை ஆயுள்

image

மளவர்நத்தத்தை சேர்ந்தவர் பொன இசக்கி. இவர் இவரது மனைவியை 2013-ல் வெட்டி கொலை செய்தார். இதற்கு பழிக்கு பலியாக கடந்த 2014-ல் பொன் இசக்கி மனைவியின் சகோதரர்களான கால்வாயை சேர்ந்த முருகன், சங்கரன் சேர்ந்து பொன் இசக்கி, அவரது தந்தை நங்கமுத்துவை வெட்டி கொலை செய்தனர். இது சம்பந்தமான வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் முருகன், சங்கரனுக்கு இரட்டை ஆயுள் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

error: Content is protected !!