News November 17, 2024

சீசனையொட்டி குமரியில் 180 கேமராக்கள் பொருத்தம்:  SP

image

கன்னியாகுமரியில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசன் நேற்று(நவ.,16) தொடங்கியது. இந்த சீசன் ஜனவரி 20ஆம் தேதி வரை 65 நாட்கள் நீடிக்கிறது. இதையொட்டி யாகுமரி நகர பகுதி முழுவதும் 180 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே செயல்படாமல் இருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் சரிசெய்யப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் SP சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 3, 2026

குமரி: விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

image

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் இம்மானுவேல் (50). இவர் டிரைவர் ஆவார். இவருக்கு கடந்த ஒரு மாத காலமாக சிறுநீரக பிரச்சனை இருந்து வந்தது. இதனால், மனவேதனையில் இருந்த அவர் பார்வதிபுரம் பகுதியில் களைக்கொல்லி விஷம் மருந்தை குடித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக, இரணியல் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

News March 2, 2026

குமரி: ஓடும் ரயிலில் விழுந்து ஒருவர் பலி

image

அம்மாண்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் அஜின் (29 ). கபடி வீரரான இவர் தனது நண்பர்களுடன் சென்னையில் உள்ள நண்பரை பார்ப்பதற்காக நேற்று மாலை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றனர். தளபதி சமுத்திரம் பகுதியில் ரெயில் சென்று கொண்டிருந்தபோது அஜின் ரயில் பெட்டியில் இருந்து கீழே தவறி விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு அவர் உயிரிழந்த நிலையில் நாகர்கோவில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 2, 2026

குமரி : இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

image

குமரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. <>இங்கு கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

error: Content is protected !!