News November 17, 2024

வாகன ஓட்டுநர் மர்மமான முறையில் உயிரிழப்பு

image

ஆளவந்தநல்லூரை சேர்ந்த மனோகா் சொந்தமாக வாகனம்  ஓட்டி தொழில் செய்யும் நிலையில், நேற்று சவாரி இருப்பதாகக் கூறி வாகனத்துடன் வெளியில் சென்றவர், நள்ளிரவில் சங்கா் நகா் அருகே, தனது வாகனத்துக்குள் தலையில் அடிபட்ட நிலையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதையறிந்த சோமரசம்பேட்டை போலீஸாா் மனோகரின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

Similar News

News March 1, 2026

திருச்சி: டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு வேலை!

image

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.

News March 1, 2026

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு

image

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்.ஐ டி), டெக்னிக்கல் உதவியாளர், இளநிலை பொறியாளர், நூலகம் மற்றும் தகவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுடைய நபர்கள் www.nitt.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, வரும் மார்ச் 25-ம் தேதிக்குள், “The Register, NIT, Trichy – 620015” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 1, 2026

திருச்சி: +2 பொதுத்தேர்வு எழுதவுள்ள 31,215 பேர்

image

தமிழகம் முழுவதும் +2 பொதுத்தேர்வு நாளை (மார்ச் 2) தொடங்க உள்ளது. இத்தேர்வினை திருச்சி மாவட்டத்தில் 134 தேர்வு மையங்களில், 258 பள்ளிகளைச் சேர்ந்த 14,731 மாணவர்கள், 16,484 மாணவிகள் என மொத்தம் 31,215 பேர் எழுத உள்ளனர். மேலும் தனித்தேர்வர்களாக 510 ஆண்கள், 457 பெண்கள் என 967 பேர் எழுத உள்ளனர். தேர்வு நல்ல முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய 260 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!